13 4
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியுடன் மறைகர அரசியல்! குற்றச்சாட்டுக்களை புறக்கணித்த ரங்க திசாநாயக்க

Share

ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் தந்தன குணதிலக்க தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும்,அவை உண்மைக்கு புறம்பானவை என இலஞ்சம்,ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இயக்குநர் ஜெனரல் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

2004 ஆம் ஆண்டு தான் நான் மஜிஸ்திரேட் நீதிபதியாக நியமிக்கப்பட்டேன்.2020 ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் 2025 இல் இலஞ்சம்,ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இயக்குநர் ஜெனராக நியமனம் பெற்றேன்.

நான் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டால் நான் நீதிபதியாக செயற்பட தகுதியற்றவன்.

ஆதலால் 20 வருடங்களாக தந்தன குணதிலக்க யாருக்கும் சொல்லாத இரகசியமாக இருந்தால், இவர் நீதிபதியாக இருக்க தகுதியில்லையென அவர் நீதித்துறை ஆணைக்குழுவுக்கும் தெரிவித்திருக்கலாம்ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

ஆதலால் அவர் சொல்லும் வகையில் நான் எவ்வித கமிட்டியிலும் இருக்கவில்லை.இதை நான் முற்றாக நிராகரிக்கின்றேன் என்றார்.

இவ்வளவு நாள் சொல்லாமல் இப்போ ஏன் சொல்லுகிறார் என்றார் அதன் நோக்கம் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் நம்பிக்கையீனமாக்குவதாகும்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குறித்து தவறான செய்திகளைப் பரப்பி, அதன் செயல்பாடுகளை அவதூறு செய்பவர்களுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஊடக அறிக்கை ஒன்றையும் இன்று (02) நடைபெற்ற மாநாட்டில் வெளியிட்டார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இதுபோன்ற நடவடிக்கைகள் ஆணையத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், ஆணைகுழுவால் நடத்தப்படும் முக்கிய விசாரணைகளிலிருந்து பொது மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதாகவும், ஆணைக்குழு செயல்பாடுகளின் உண்மைத் தன்மை குறித்த மாற்றுக் கருத்தை உருவாக்குவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டம், 2023 இன் கீழ் ஆணைகுழுவின் அதிகாரங்களை சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, அதற்கு சட்டப்பூர்வ அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
12 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள்.. அர்ச்சுனாவின் பகிரங்க குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி...

11 4
இலங்கைசெய்திகள்

வலுக்கும் தாஜுதீன் விவகாரம்.. நாமலின் சந்தேகத்திற்கிடமான ஆர்வம்!

வசீம் தாஜுதீனின் மரணம் குறித்த புதிய விசாரணைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற...

10 4
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து – அச்சத்தில் ராஜபக்ச குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால்...

9 4
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

உள்நாட்டு உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சிவப்பு வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் வாங்குவதற்கு லங்கா...