tamilni 318 scaled
இலங்கைசெய்திகள்

பெற்றோரின் பாதுகாப்பிலிருந்த மாணவியை கடத்திய காதலன்

Share

பெற்றோரின் பாதுகாப்பிலிருந்த மாணவியை கடத்திய காதலன்

குருநாகல், பொல்கஹவெல பிரதேசத்தில் 15 வயதுடைய மாணவி ஒருவரை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்திச் சென்ற இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யட்டிகலொலுவ, பொரமடல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி இரவு 8.30 மணி முதல் மகள் காணாமல் போயுள்ளதாக அவரின் தாயார் நேற்று பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

10ஆம் தரத்தில் கல்வி கற்கும் தனது மகளுடன் இளைஞனுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக மாணவியின் தாய் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொல்கஹவெல பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் சந்தேக நபரான காதலனை நேற்று மாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

காணாமல் போனதாக கூறப்படும் பாடசாலை மாணவியும் சந்தேகநபரின் வீட்டில் இருந்த போது பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவி மருத்துவ பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேகத்திற்குரிய காதலனை இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...

Election Commission 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025: தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பம் – பெயர் சேர்க்க ஊடகங்களுக்கு நேரடிப் பொறுப்பு!

2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளைத் (Voter Register Revision) தேர்தல்கள் ஆணைக்குழு...