24 661a659f59292
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கடத்தப்பட்டமையால் பரபரப்பு

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கடத்தப்பட்டமையால் பரபரப்பு

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் இளைஞனை வெள்ளை வேனில் கடத்தி சென்ற இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இரண்டு வாடகை வண்டி சாரதிகளால் குறித்த இளைஞர் கடத்தப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல், மல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். கடத்தல் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், வேனை அடையாளம் கண்டுள்ளனர்.

அதற்கமைய,ஓட்டுநர்கள் இருவரும் தங்கியிருந்த அடியம்பலம் பகுதியில் உள்ள இரண்டு மாடி வாடகை வீட்டில் சோதனை நடத்தினர்.

குறித்த இளைஞன் அறை ஒன்றில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இடத்திற்கு பொலிஸார் சென்று பார்த்த போது சாரதிகள் இருவரும் ஹெரோயின் போதைப்பொருளை பாவித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை மற்றும் ஹெட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த சாரதிகள் இருவரிடமும் 4 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதிகள் இருவரும் கட்டுநாயக்க பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் விநியோக வலையமைப்பில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞன் தவறுதலாக கடத்தப்பட்டதாக சந்தேக நபர்களான சாரதிகள் இருவரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சாரதிகளையும் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...