15 5
இலங்கைசெய்திகள்

வேலைக்கு சென்ற இளைஞன் பரிதாபமாக மரணம்

Share

இரத்தினபுரி, உருபொக்க – எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பனமுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

25 வயதுடைய வெலேகே அஞ்சன சதுரங்க என்ற இளைஞன் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரையான காலப்பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர் வேலைக்குச் செல்வதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர், அப்பகுதி மக்களால் எம்பிலிபிட்டிய பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞர் எம்பிலிபிட்டிய பனமுற பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...