tamilni 405 scaled
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சி கிணற்றில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுவன் பலி

Share

கிளிநொச்சி கிணற்றில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுவன் பலி

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன், காஞ்சிபுரம் கிராமத்தில், பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி .

குறித்த சம்பவம் 26 ஆம் திகதி மதியம் 1:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. தாயார் நாளாந்த கூலி வேலைக்காக சென்ற பொழுது வீட்டில் தந்தையுடன் இருந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

தந்தையார் நித்திரையில் இருந்த பொழுது காணிக்குள் அமைந்திருந்த பாதுகாப்பற்ற (மண்) கிணற்றில் சிறுவன் விழுந்துள்ளான் .

திடீரென கண் விழித்த தந்தை சிறுவனைக் காணாது தேடியுள்ளார். பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் கிணற்றுக்குள் சேற்றில் புதைந்த நிலையில் சிறுவனை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சந்திரகுமார் பாதுசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதபரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...