tamilni 216 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் காதலியின் மிரட்டலால் காதலன் உயிர்மாய்ப்பு

Share

யாழில் காதலியின் மிரட்டலால் காதலன் உயிர்மாய்ப்பு

யாழில் காதலித்த பெண் தன்னைத் திருணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்யப் போவதாக கூறியதால் பீதியடைந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையில் நேற்று (16.10.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் நெழுங்குளம் வீதி, கொழும்புத்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞராவார்.

காதலித்த பெண்ணுக்கு வயது குறைவு என்பதால் தந்தையார் மகனைப் பெண்ணுடன் கதைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். வயது வந்ததும் திருமணம் குறித்து பேசலாம் என்று பெண் வீட்டாரிடமும் தந்தையார் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் குறித்த பெண்ணுக்குப் பிடிக்கவில்லை. இதனால் தன்னைத் திருமணம் செய்யாவிடில் தான் தற்கொலை செய்யப்போவதாக பெண் தனது காதலனுக்குத் தொலைபேசியூடாக தகவல் அனுப்பியுள்ளார்.

இதனால் பீதியடைந்த இளைஞர் நேற்று மாலை தூக்கில் தொங்கி உயிர்மாய்த்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
uniform
இலங்கை

முடிவுக்கு வந்தது சீருடை விவகாரம்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றதாக கூறப்படும் சுகாதார உதவியாளரின் சீருடை தொடர்பான பிரச்சினை முடிவுக்கு...

ஆள் மாறாட்ட திட்டம்
இலங்கை

முறியடிக்கப்பட்டது சிரான் பாஷிக்கின் ஆள் மாறாட்ட திட்டம்!

துபாயில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான சிரான் பாஷிக், காவல்துறையினரிடம்...

fgfbbbh4yjm cyuj 1
இலங்கை

எல் நினோவின் கடுமையான தாக்கம் – மின்சாரசபை மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள்.

  தற்போது நிலவும் எல்-நினோ நிலைமை காரணமாக அடுத்த ஆண்டின் மார்ச் மாத இறுதியிலும் ஏப்ரல்...

digital
இலங்கை

டிஜிட்டல் ஊடகங்களுக்கு வரி!

2025/2026 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானம், வரிக்கு உட்படுத்தப்படும் என உள்நாட்டு...