24 661209c5704c8
இலங்கைசெய்திகள்

அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை: கொலை வழக்கின் சந்தேகநபர் வாக்குமூலம்

Share

அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை: கொலை வழக்கின் சந்தேகநபர் வாக்குமூலம்

பொரலஸ்கமுவ (Boralaskamuva) பிரதேசத்தில் நபரொருவரின் தலையை துண்டித்து கொலை செய்த வழக்கின் பிரதான சந்தேகநபரை பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த 49 வயதுடைய கொத்தனார் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபருக்கும் சந்தேகநபரின் மனைவிக்கும் 15 வருடங்களாக தொடர்பு இருந்ததாக சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் கொலை செய்யப்பட்டவருடன் இருப்பார் என்ற சந்தேகத்தில் தான் இந்த கொலையை செய்ததாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமக்கு 24 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகள்கள் இருப்பதாகவும், சமூகத்தின் அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தினால் தான் இந்த குற்றத்தை திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதன் பிரகாரம், பெல்லந்தரை சந்தி பகுதியில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்து சென்று பொரலஸ்கமுவ, தேவலமுல்ல பிரதேசத்தில் வைத்து கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொலையை செய்துவிட்டு தப்பிச்செல்லும் போது தனது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாகவும், கொலைக்கு பயன்படுத்திய கத்தி வீதியில் உள்ள வடிகாலில் இருந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சந்தேகநபர் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...