COVID 19 vaccine booster iStock 1334441038 2021 08 FB 1200x630 1
இலங்கைசெய்திகள்

பூஸ்டரால் பயனில்லை ஆய்வில் தகவல்!!

Share

பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் குறைவடைந்து வருவதாக ஆயு்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவியதால் தடுப்பூசியின் 3-வது டோசைபல்வேறு நாடுகள் தங்களது குடிமக்களுக்கு செலுத்தி வருகின்றன.

அமெரிக்காவில் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசியின் 3-வது டோஸ் செலுத்தப்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செயல்திறன் 4 மாதத்தில் கணிசமாக குறைகிறது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ந்தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 22-ந்தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 2.40 லட்சம் மற்றும் 93 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதன் அடிப்படையில் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடத்திய புதிய ஆய்வில் கூறியிருப்பதாவது:-

பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகளின் 3-வது டோசின் செயல்திறன் 4-வது மாதத்தில் கணிசமாக குறைந்து விடுகிறது.

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவிய காலத்தில் அவசர சிகிச்சைகளுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறன் 3-வது டோசுக்கு பிறகு இரண்டு மாதங்களில் 87 சதவீதமாக இருந்தது.

ஆனால் 4-வது மாதத்தில் செயல் திறன் 66 சதவீதமாக குறைந்தது.

ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவதற்கு எதிரான தடுப்பூசியின் செயல் திறன் முதல் 2 மாதங்களில் 91 சதவீதமாக இருந்தது. ஆனால் 3-வது டோசுக்கு பிறகு 4-வது மாதத்தில் 78 சதவீதமாக குறைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#WorldNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...