நேற்று வவுனியா – காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புளியங்குளம் பொலிஸாருடன் இணைந்து பரசங்குளம் காட்டுப் பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது 01 ஆர்பிஜி ரக குண்டு , 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டு 03ம் மீட்கப்பட்டது., மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழக்க செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளினை புளியங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
#srilankanews
Leave a comment