புத்தளத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

tamilnaadi 71

புத்தளத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

புத்தளம் – ஆனமடுவ நகரில் அமைந்துள்ள கால்வாய் ஒன்றில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சடலம் இன்று (21.01.2024) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் ஓய்வுபெற்ற வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் (வயது 64) எனவும் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், இவர் தனது சகோதரருடைய மகளின் திருமண வீட்டுக்கு சென்றிருந்த நிலையிலேயே இவ்வாறு மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதற்கமைய இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version