sucide 1 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பு கல்லடியில் பரபரப்பு: தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

Share

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை (02) காலை இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி ஜீவி (GV) தனியார் வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள வர்த்தக நிலையங்கள் நிறைந்த பகுதியில், உயரமான ஓரிடத்தில் சடலம் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அக்கரைப்பற்று, சமுர்த்தி வீதியைச் சேர்ந்த முகுந்தன் சந்தோஷ் (22 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் தடயவியல் (SOCO) பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மற்றும் பல வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள கல்லடிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதால், அப்பகுதியில் பெருமளவிலான மக்கள் திரண்டுள்ளதுடன் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. குறித்த இளைஞரின் மரணம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்துப் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...