பதினேழு வயது சிறுமிக்கு எதிரான அத்துமீறல் செயற்பாட்டுக்கு உதவியதற்காக ஒரு ஆசிரியை மற்றும் குற்றச்செயலை மேற்கொண்ட அவரது கணவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மேலும், கடுங்காவல் சிறைத்தண்டனையும் இந்த தன்டனையை 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதி நவரட்ண மாரசிங்க, தீர்ப்புக்கு மேலதிகமாக இரண்டு பிரதிவாதிகளுக்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
பிரதிவாதியான ஆசிரியை, ஒரு தொலைதூரப் பகுதியிலிருந்து கொழும்புக்கு குறித்த சிறுமியை அழைத்து வந்துள்ளதாகவும், இதன்போதே அவரது கணவர் அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேற்படி குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் அரசு தரப்பு வெற்றி பெற்றுள்ளதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.