1 31
இலங்கைசெய்திகள்

17 வயது சிறுமிக்கு எதிரான பாலியல் அத்துமீறல்! ஆசிரியை உள்ளிட்ட இருவருக்கு 45 ஆண்டுகள் சிறை

Share

பதினேழு வயது சிறுமிக்கு எதிரான அத்துமீறல் செயற்பாட்டுக்கு உதவியதற்காக ஒரு ஆசிரியை மற்றும் குற்றச்செயலை மேற்கொண்ட அவரது கணவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேலும், கடுங்காவல் சிறைத்தண்டனையும் இந்த தன்டனையை 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதி நவரட்ண மாரசிங்க, தீர்ப்புக்கு மேலதிகமாக இரண்டு பிரதிவாதிகளுக்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

பிரதிவாதியான ஆசிரியை, ஒரு தொலைதூரப் பகுதியிலிருந்து கொழும்புக்கு குறித்த சிறுமியை அழைத்து வந்துள்ளதாகவும், இதன்போதே அவரது கணவர் அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேற்படி குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் அரசு தரப்பு வெற்றி பெற்றுள்ளதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...