1 31
இலங்கைசெய்திகள்

17 வயது சிறுமிக்கு எதிரான பாலியல் அத்துமீறல்! ஆசிரியை உள்ளிட்ட இருவருக்கு 45 ஆண்டுகள் சிறை

Share

பதினேழு வயது சிறுமிக்கு எதிரான அத்துமீறல் செயற்பாட்டுக்கு உதவியதற்காக ஒரு ஆசிரியை மற்றும் குற்றச்செயலை மேற்கொண்ட அவரது கணவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேலும், கடுங்காவல் சிறைத்தண்டனையும் இந்த தன்டனையை 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதி நவரட்ண மாரசிங்க, தீர்ப்புக்கு மேலதிகமாக இரண்டு பிரதிவாதிகளுக்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

பிரதிவாதியான ஆசிரியை, ஒரு தொலைதூரப் பகுதியிலிருந்து கொழும்புக்கு குறித்த சிறுமியை அழைத்து வந்துள்ளதாகவும், இதன்போதே அவரது கணவர் அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேற்படி குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் அரசு தரப்பு வெற்றி பெற்றுள்ளதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 68391c518038f
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் விரைவில் கைச்சாத்திடும் இலங்கை

அமெரிக்கா, இலங்கை மீது விதித்த கட்டணக் கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான, இரண்டாவது உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று வோசிங்டனில்...

25 6839329e68755
உலகம்செய்திகள்

அமெரிக்காவின் சிறப்பு தூதர் முன்கொணர்ந்த ஒப்பந்தம்: ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் சிறப்பு தூதர் விட்காப் முன்கொணர்ந்த ஒப்பந்தத்தை...

25 68392050e9f7e
இலங்கைசெய்திகள்

மீண்டும் 16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்!

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களின் 16 பொறுப்பதிகாரிகளுக்கு, உடனடி இடமாற்றங்களை இலங்கை பொலிஸ் தலைமையகம்...

25 68392036c28da
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலை: நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளில்...