IMG 20220517 WA0014
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

‘குருதியால் தோய்ந்த நம் தேசத்துக்காக ஒரு துளி குருதி’ நிகழ்வு

Share

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி தமிழர் தாயகத்தில் நாளை பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களின் தயார்ப்படுத்தலில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையில் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்ததான நிகழ்வு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை இடம்பெறவுள்ளது.

‘குருதியால் தோய்ந்த நம் தேசத்துக்காக ஒரு துளி குருதி’ என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதில் அனைவரும் கலந்துகொண்டு இறுதிப் போரில் உயிர்நீத்த எமது உறவுகளின் நினைவாக இரத்ததானம் செய்யுமாறு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...