கொழும்பில் நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Share

கொழும்பில் நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் பொலிஸ் குழுவினால் நேற்று முன்தினம் (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு மாணவர் விசாவில் இளைஞர்களை மேலதிக கல்விக்காக அனுப்பும் நிறுவனத்தை கொழும்பில் நடத்தி வந்த கோடீஸ்வர வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக கூறப்படும் யுவதியும் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குறித்த நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளுமாறு சந்தேகத்திற்குரிய கோடீஸ்வர வர்த்தகர் குறித்த யுவதிக்கு அறிவித்துள்ளார்.

அவரின் அறிவிப்பின் பேரில் இளம் யுவதி நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற நிலையில், சந்தேகநபரால் அறையொன்று முன்பதிவு செய்யப்பட்டு இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இளம் பெண் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவினர் முறைப்பாடு செய்த நிலையில், முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகத்தின் பேரில் கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட யுவதி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த யுவதி தன்னுடன் விருப்பத்துடன் வந்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...