15 23
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு அறிவிப்பு

Share

கடவுச்சீட்டுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு அறிவிப்பு

சாதாரண முறையில் கடவுச்சீட்டை பெறுவதற்கு இந்த நாட்களில் மிக நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தை சுற்றிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளவர்கள் மட்டுமே திணைக்களத்திற்கு வருமாறு மக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

இலங்கையில் போதுமான கடவுச்சீட்டுகள் உள்ளதாகவும், நவீனமயமாக்கப்பட்டு, வித்தியாசமான முறையில் மக்களுக்குக் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கடந்த 21ஆம் திகதி முதல் புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் வெளிப்புற அட்டை நீல நிறத்தில் உள்ளது. முன்பு சிவப்பு நிறமாக இருந்தது.

 

பழைய கடவுச்சீட்டில் 64 பக்கங்கள் இருந்த நிலையில், புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்கள் மட்டுமே உள்ளன.

 

பழைய கடவுச்சீட்டில் N என்ற எழுத்தும், புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் P என்ற எழுத்தும் காணப்படுகின்றது.

 

கடவுச்சீட்டின் ஒவ்வொரு பக்கமும் இலங்கையின் நாகரீகத்தையும் கலாச்சாரத்தையும் காட்டும் வண்ணம் வரையப்பட்டிருப்பதும் சிறப்பம்சமாகும்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...