25 694147cfc9dd2
இலங்கைசெய்திகள்

பெங்களூருவில் விதிகளை மீறி இயங்கிய பிரபலங்களின் கேளிக்கை விடுதிகள்: ஆர்யன் கான் மற்றும் ஷில்பா ஷெட்டி மீது வழக்குப்பதிவு!

Share

பெங்களூரு, கப்பன் பூங்கா பகுதியில் உள்ள பாலிவுட் நட்சத்திரங்களுக்குச் சொந்தமான கேளிக்கை விடுதிகள் (Pubs/Clubs), நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இயங்கியதாகக் கூறி பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி திறப்பு விழாவின் போது, அவர் ஆபாச சைகை காட்டியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பொலிஸார் கண்காணிப்பு கேமராக்களை (CCTV) ஆய்வு செய்தனர்.

அந்த விடுதி அதிகாலை 1.25 மணி வரை செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது. காலக்கெடுவை மீறியதற்காகக் கப்பன் பூங்கா பொலிஸார் விடுதி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், நடிகை ஷில்பா ஷெட்டிக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் கடந்த வாரம் தொழிலதிபர் ஒருவரால் சர்ச்சை ஏற்பட்டது.

இவ்விவகாரம் குறித்துச் சோதனை செய்தபோது, அந்த விடுதியும் விதிமுறைகளை மீறி அதிகாலை 1.30 மணி வரை செயல்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாகவும் கப்பன் பூங்கா பொலிஸார் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெங்களூருவில் இரவு நேரக் கேளிக்கை விடுதிகளுக்கான நேரக்கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....