வெளிநாடொன்றுக்கு தப்பிக்க முயன்ற 32 பேருக்கு நேர்ந்த நிலை!
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றுக்கு தப்பிக்க முயன்ற 32 பேருக்கு நேர்ந்த நிலை!

Share

வெளிநாடொன்றுக்கு தப்பிக்க முயன்ற 32 பேருக்கு நேர்ந்த நிலை!

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச்செல்ல முயன்ற நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு கடல்வழியாக சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்றபோது 55 பேர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு 07-08-2023 எடுத்துக் கொள்ளப்பட்ட போது 32 பேர் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.

அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட அதனடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் 10 மாத கால சாதாரண சிறை தண்டனை என்ற அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுதுரை உத்தரவிட்டார்.

தண்ட பணத்தை அடுத்த மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனையில் விதிக்கப்பட்டது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...