கொழும்பு-கட்டுநாயக்க பகுதியில் கோர விபத்து:இருவர் பலி

rtjy 285

கொழும்பு-கட்டுநாயக்க பகுதியில் கோர விபத்து:இருவர் பலி

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவமானது நேற்று(22.10.2023) இரவு கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தானது கட்டுநாயக்க பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version