இலங்கை

மட்டக்களப்பில் போதிய பெற்றோல் கையிருப்பு: “செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்” – மாவட்ட அரசாங்க அதிபர் எச்சரிக்கை!

Share

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் (Petrol) கையிருப்பில் இருப்பதால், பொதுமக்கள் தேவையில்லாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று செயற்கையாகத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 1) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

மாவட்டத்தில் நாளாந்தம் 1,65,000 லீற்றர் எரிபொருள் தேவை இருந்தபோதிலும், கையிருப்பில் இருந்து இதுவரை 2,50,000 லீற்றர் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் 18,000 லீற்றர் விநியோகிக்கத் தயாராக இருக்கின்றது.

6,500 லீற்றர் கொள்வனவு கொண்ட 35 பவுசர்கள் கொள்வனவுக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன், அவை நாளை மட்டக்களப்பை வந்தடையும்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாளாந்தம் 3,000 லீற்றர் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இன்று 6,000 லீற்றர் முடிவடைந்துள்ளது. எனவே இது தேவையில்லாது கொள்வனவு செய்யப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.”

கொள்வனவு செய்த பெற்றோல் பவுசர்கள் நாளை மட்டக்களப்பை வந்தடையும்போது, நாளைக்கு பெற்றோல் வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலை ஏற்படும். எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் பதட்டப்பட வேண்டாம்.

அவ்வாறு பதட்டப்பட்டுப் பெற்றோலைக் கொள்வனவு செய்து பதுக்கும்போது, அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்குப் பெற்றோல் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே செயற்கைத் தட்டுப்பாட்டை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...