15 22
இலங்கைசெய்திகள்

படலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழு

Share

படலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. நான்கு பேரைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிரேஸ்ட மேலதிக சொலிசுட்டர் ஜெனரல் ரொஹான்த அபேசூரியவின் தலைமையில் இந்தக் குழு செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி சொலிசுட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அரசாங்க சிரேஸ்ட சட்டத்தரணி ஜயனி வேகடபொல மற்றும் அரச சட்டத்தரணி சக்தி ஜயகொடராச்சி ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

படலந்த குழு அறிக்கையின் சாட்சியங்கள் ஊடாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என இந்த குழு ஆராய உள்ளது.

மேலும் தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இந்த குழு கவனம் செலுத்த உள்ளது.

88-90ம் ஆண்டுகளில் படலந்த வீதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சித்திரவதை மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் படலந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
02 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கடும் சரிவு: மசகு எண்ணெய் விலை உயர்வுடன் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும்...

01 8
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்பு: அதிகார மையத்தில் முக்கிய மாற்றம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புதல்வர், அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி...

20 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் நள்ளிரவில் கொள்ளைச் சம்பவம்: கணவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (மார்ச் 8) அதிகாலை...

19 5
விளையாட்டுசெய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (8) நடைபெற்ற விறுவிறுப்பான ஐசிசி...