tamilnih 37 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணிலுடன் ஆலோசனை நடத்த பசில் வருகை

Share

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணிலுடன் ஆலோசனை நடத்த பசில் வருகை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்தாலோசனையொன்றை நடத்த பசில் ராஜபக்‌ச இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுண கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் பலரின் வேண்டுகோளுக்கு அமையவே அவர் விரைவில் நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுஜன பெரமுண கட்சியை உருவாக்கிய பசில் ராஜபக்‌ச, கடந்த டிசம்பர் தொடக்கம் அரசியல் செயற்பாடுகளை விட்டும் தவிர்ந்து அமெரிக்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் கட்சியின் மூத்த அரசியல்வாதிகளை ஒதுக்கிச் செயற்படும் நாமல் ராஜபக்‌சவின் நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சிக்குள் எழுந்துள்ள பிளவுகள் தொடர்பில் பசில் நேரடியாக தலையிட்டு தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் பலரும் வலியுறுத்தியிருந்தனர்.

அதனையேற்று நாடு திரும்பவுள்ள பசில் ராஜபக்‌ச, எதிர்வரும் இரண்டொரு வாரங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேரடிக் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளார்.

Share
தொடர்புடையது
sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...

MediaFile 13
செய்திகள்இலங்கை

நாடே ஒன்றாக: 3 மாதங்களில் 77,000 பேர் கைது! ஒரு டன்னுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

இலங்கை காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் நாடே ஒன்றாக எனும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த...