24 6601966673577
இலங்கைசெய்திகள்

ரணிலின் மாஸ்டர் பிளான் – பொறியில் சிக்கிய பசில் தரப்பினர்

Share

ரணிலின் மாஸ்டர் பிளான் – பொறியில் சிக்கிய பசில் தரப்பினர்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மறைமுக ஆதரவினை வழங்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக பல்வேறு பிரிவுகளை பிரிந்து வாக்குகளை பிரிப்பதை தவிர்க்கவும் வேட்பாளரை முன்வைக்காமல் இருப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் பசில் ராஜபக்ஷ தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று கூடி கலந்துரையாடப்பட்டது.

இக்கட்டான காலங்களில் தனது கட்சி உறுப்பினர்களை பாதுகாத்த ரணில் விக்ரமசிங்கவை மறக்க முடியாது என பசில் ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவின் ஊடாக வேட்பாளரை நிறுத்தினால் அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் இருப்பதற்கு கட்சி தீர்மானித்தால், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் குழு கட்சியில் இருந்து பிரிந்து ரணிலுக்கு ஆதரவளிக்கும் என இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்சியின் ஒற்றுமைக்காக வேட்பாளர் ஒருவரை முன்வைக்கக் கூடாது என்பதே பசில் ராஜபக்சவின் கருத்தாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...