24 664aa45d18f6e
இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்பத்திற்கு ஏமாற்றம்

Share

ராஜபக்ச குடும்பத்திற்கு ஏமாற்றம்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக பசில் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் தலைமையிலான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெற மீண்டும் ஒருமுறை முயற்சித்த போதிலும், அது தோல்வியடைந்துள்ளது.

நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க உறுப்பினர்கள் விரும்பாததால் அது பாதியிலேயே முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கையெழுத்து ஆவணத்தை ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்தும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

பொதுஜன பெரமுன கட்சியில் இல்லாத ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் மாகாணத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவருக்கு விஷேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களுடன் இணக்கமாக செயற்பட்டாலும் அந்த முயற்சி முற்றாக தோல்வியடைவதாகவும் பசில் ராஜபக்சவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அனுமதி பெற வேண்டும் என்ற நோக்கம் தோல்வியடைந்துள்ளது.

எவ்வாறாயினும், ரணில் தனது இந்தோனேஷிய விஜயத்தை முடித்தவுடன் மீண்டும் கலந்துரையாடுவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...