24 66ed4ce5dfc9c
இலங்கைசெய்திகள்

பசில் – நாமலின் பிள்ளைகள் நாட்டிலிருந்து வெளியேறிய செய்தி! மொட்டு கட்சி வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு

Share

 பசில் – நாமலின் பிள்ளைகள் நாட்டிலிருந்து வெளியேறிய செய்தி! மொட்டு கட்சி வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு

பசில் ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் அவர், கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக விரைவில் நாடு திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இன்று அதிகாலை இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் சில வாரங்களுக்கு முன்னர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருந்தார்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் காரணமாக பசிலுக்கான வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

தான் நாட்டை விட்டு வெளியேறப் போவது தொடர்பில் பசில் ராஜபக்ச ஏற்கனவே கட்சிக்கு அறிவித்திருந்தார். எனினும் அவர் தனது மருத்துவப் பரிசோதனையை தொடர்ந்து, கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விரைவில் நாடு திரும்புவார் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் இரண்டு பிள்ளைகளும் அவரது மனைவியின் குடும்பத்துடன் இன்று இலங்கையை விட்டு வெளியேறியதாகக் கூறப்படும் கூற்றுக்கள் உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாமல் ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் கதிர்காமம் விகாரைக்கு சமய அனுஷ்டானங்களுக்காகச் சென்றுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...