வர்த்தக வங்கிகளின் வட்டி வீதங்கள் குறித்து தகவல்
இலங்கைசெய்திகள்

வர்த்தக வங்கிகளின் வட்டி வீதங்கள் குறித்து தகவல்

Share

வர்த்தக வங்கிகளின் வட்டி வீதங்கள் குறித்து தகவல்

வர்த்தக வங்கிகளில் கடன் வட்டி வீதங்கள் குறைக்கப்படவில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மத்திய வங்கியானது தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக கொள்கை வட்டி வீதத்தை குறைத்துள்ளது.

இருந்த போதிலும் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது வர்த்தக வங்கிகளில் கடன் வட்டி வீதங்கள் குறைக்கப்படவில்லை. இது பொருளாதாரத்தின் மீட்சிக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வங்கி வட்டி வீதங்களை நியாயமான முறையில் குறைக்கவும், கடன் வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை தளர்த்தவும் வங்கி மற்றும் நிதித்துறை செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

என்ற போதும் மத்திய வங்கியானது கொள்கை வட்டி வீதங்களை குறைத்துள்ள நிலையில், வட்டிகளை குறைக்காத வங்கிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “மத்திய வங்கியின் கொள்கை வட்டிவீதங்கள் குறைக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக, அரச மற்றும் வர்த்தக வங்கிகள், நிதி நிறுவனங்களும் தமது வட்டி வீதங்களை குறைக்க வேண்டும்.

அவ்வாறு வட்டி வீதங்கள் குறைக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் எச்சரிக்கை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...