27 7
இலங்கை

வங்கிகளில் உடமைகளை அடகு வைத்தவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

Share

வங்கிகளில் உடமைகளை அடகு வைத்தவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

சுற்றுலா ஹோட்டல்களை அடமானமாக வைத்து வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த தவறியதன் காரணமாக அநுராதபுரத்தில் உள்ள 25 முக்கிய சுற்றுலா விடுதிகள் நிதி நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் பல சிறிய மற்றும் நடுத்தர சுற்றுலா விடுதிகள் இடிந்து விழுந்துள்ளதாக அநுராதபுரம் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டெமியன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் கொரோனா வைரஸின் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, முழு நாட்டின் சுற்றுலா வணிகமும் வீழ்ச்சி கண்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரவில்லை, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வரவில்லை. இதனால், இந்த நாட்டில் சுற்றுலா வணிகம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால், கடன் வாங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் கடும் நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

கடன் பெற்ற ஹோட்டல் உரிமையாளர்கள், கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர். தற்போது, ​​தனியார் வங்கிகளில் எங்கள் ஹோட்டல்களை அடகு வைத்து கடன் வாங்கியுள்ளோம்.

கடனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் இதுவரை அனுராதபுரத்தில் உள்ள எனது 2 முக்கிய ஹோட்டல்கள் வங்கியால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட அந்த ஹோட்டல்களை, வங்கிகள் முறையாக பராமரிக்கவில்லை. ஏலம் விட நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது, ​​அந்த ஹோட்டல்களின் நீச்சல் குளங்கள், தோட்டங்கள், கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து வருகின்றன.

இதன் காரணமாக 7,8 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இந்த ஹோட்டல்களை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.

கடனில் இருந்து விடுபட முடியாது. எனவே, இவ்விடயத்தில் பொறுப்பானவர்கள் தலையிட்டு அனுராதபுரம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும்” என டெமியன் பெர்னாண்டோ கேட்டுக் கொண்டார்.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...