வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கு ஆபத்தா..!
இலங்கைசெய்திகள்

வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கு ஆபத்தா..!

Share

வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கு ஆபத்தா..!

வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் பாதுகாப்பானது இல்லை என்ற கரிசனை அர்த்தமற்றது. வைப்புகள் எப்போதும் பாதுகாப்பானவை. அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை மீறினால் மாத்திரமே அவற்றிற்கு ஆபத்து ஏற்படும் என பொருளாதார நிபுணர் கலாநிதி நிசான் டி மெல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்திற்கு என்ன நடக்குமோ என்ற அச்சம் தேவையற்றது.

வங்கியில் உள்ளவைப்புகளிற்கு பாதிப்பு என்ற அச்சத்திற்கு தீர்வை காணவேண்டும். வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டு மக்கள் தங்கள் பணத்தை மீளபெற்றுக்கொள்ள முயலும் சூழ்நிலை உருவாக அனுமதிக்க கூடாது.

அவ்வாறான பதற்றநிலையேற்பட்டால் அது வங்கிகளை பாதிக்கும். அவ்வேளையே வங்கிகள் வீழ்ச்சியடையும். அவ்வாறான அதிர்ச்சி சூழ்நிலை உருவாகும்போது வங்கிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை எவராலும் தடுக்க முடியாது.

வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை உடனடியாக பெற்றுக்கொள்ள முயல்வார்கள். அந்த நிலைமையை கையாள்வது கடினம். அவ்வாறான சூழ்நிலையை நாங்கள் உருவாக்காமலிருப்பது அவசியம். வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் பாதுகாப்பானது இல்லை என்ற கரிசனை அர்த்தமற்றது.

வைப்புகள் எப்போதும் பாதுகாப்பானவை அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை மீறினால் மாத்திரமே அவற்றிற்கு ஆபத்து ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...