tamilni 275 scaled
இலங்கைசெய்திகள்

வங்கிகளில் கடன் பெறவுள்ளவர்களுக்கு அறிவுறுத்தல்

Share

வங்கிகளில் கடன் பெறவுள்ளவர்களுக்கு அறிவுறுத்தல்

வங்கி ஒப்பந்தப் படிவங்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் வழங்கப்பட்டால் அதில் கைச்சாத்திட வேண்டாம் என இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகக் கூட்டமைப்பின் (SLUNBA) பிரதித் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அறிவுறுத்தலை வர்த்தகர்களுக்கும், பொது மக்களுக்கும் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று முதல் ஆங்கில கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட வேண்டாம்.

டிசம்பர் 15ஆம் திகதி வரை வங்கிகளின் பராட் உரிமையை நிறுத்தி வைக்க அமைச்சரவை முடிவு செய்த பின், வங்கிகள் மக்களின் சொத்துக்களை கையகப்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டிற்குள் கணிசமான எண்ணிக்கையிலான வங்கிகள் இயங்கி வருவதால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) தங்களுக்கு கடன் வழங்க முடியாவிட்டால், அந்த வங்கிகளை உடனடியாக மூடுவதற்கான குறிப்புகளை வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை வங்கியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் வியாபாரம் செய்ய முடியாவிட்டால், வங்கிகளை மூட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...