களனி பாலம் தொடர்பான சர்ச்சை தொடர்பில் பந்துல குணவர்தன விளக்கம்
இலங்கைசெய்திகள்

களனி பாலம் தொடர்பான சர்ச்சை தொடர்பில் பந்துல குணவர்தன விளக்கம்

Share

களனி பாலம் தொடர்பான சர்ச்சை தொடர்பில் பந்துல குணவர்தன விளக்கம்

புதிய களனி பாலத்தில் ஆணிகள் கழற்றப்படவில்லை, அவற்றை இலகுவாக கழற்றி விடவும் முடியாது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருடப்பட்ட பொருட்களின் மொத்த இழப்பு அறுபது இலட்சம் மாத்திரமே அன்றி கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (19.07.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

களனி பாலம் தொடர்பான சர்ச்சை முற்றிலும் பொய்யானது: பந்துல குணவர்தன விளக்கம் | Bandula Kunawardana About New New Kelani Bridge

குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கில் நஷ்டம் இல்லை
மேலும் தெரிவிக்கையில், களனி பாலத்தின் ஆணிகள் கழற்றப்பட்தாக கூறப்படும் கதை முற்றிலும் பொய்யானது.

பாலத்தின் மேல்தளத்தில் பிவிசி குழாய்கள், தகவல் அமைப்பின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் குளிரூட்டிகளின் வெளிப்புற பாகங்கள், பாலத்தில் கண்கவர் ஒளி வடிவங்களை உருவாக்கும் விளக்குகள் ஆகியனவே திருடப்பட்டுள்ளன.

பீவிசி குழாய்கள் திருடப்பட்டதால் 40 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குளிரூட்டி உதிரிபாகங்கள் திருடப்பட்டதால் 0.5 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. கண்கவர் ஒளி வடிவங்களை உருவாக்கும் விளக்குகள் திருடப்பட்டதால் 10 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த இழப்பு அறுபது இலட்சம்.

புதிய களனி பாலத்தில் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படவில்லை. ஆணிகள் அகற்றப்படவில்லை. அவற்றை இலகுவாக கழற்ற முடியாது.

ஆணிகளை அகற்ற பொறியியல் நிறுவனம் சிறப்பு உபகரணங்களை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் பாலம் ஆபத்தில் இருக்கும். இது வெறும் ஆணி அடிக்கும் ஒரு அறிக்கை என குறிப்பிட்டுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...