7 52
இலங்கைசெய்திகள்

பந்துல குணவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

Share

தனது வாழ்க்கையில் முதல் முறையாக அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்காக வருகை தந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்குரிய மருந்துப் பொருள் கொள்வனவு தொடர்பான விசாரணைக்கு இன்று(28.11.2024) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில், கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானங்களுக்கு எதிராக தற்போது விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

இதன்படி கடந்த சில நாட்களாக, கடந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல அமைச்சரவை அமைச்சர்கள், வாக்குமூலங்களை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...