இலங்கைசெய்திகள்

பேக்கரி பொருட்களின் விலை பத்து ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம்

tamilni 258 scaled
Share

பேக்கரி பொருட்களின் விலை பத்து ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம்

இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் முட்டை, சீனி மற்றும் வெங்காயத்தின் விலையை குறைக்க அரசாங்கம் தலையிடாவிட்டால், பாண் தவிர்ந்த பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பாண் தவிர்ந்த பேக்கரி பொருட்களின் விலை பத்து ரூபாவினாலும், கேக் கிலோ ஒன்றின் விலை நூறு ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முட்டையின் விலை 60 ரூபாவாகவும், ஒரு கிலோ சீனி 305 ரூபாவாகவும், ஒரு கிலோ உப்பு 400 ரூபாவிலிருந்து 500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமையே இந்த விலை உயர்விற்கு காரணம்.

குறிப்பாக சந்தையில் முட்டை மற்றும் சீனியின் விலை அதிகரிப்பினால் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் குறைந்த விலையில் கேக் கிடைக்கும் வாய்ப்பை மக்கள் இழக்க நேரிடும்.

கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலம் முடியும் வரை இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முட்டை மற்றும் சீனி முக்கியமாக பேக்கரி பொருட்களுக்கு தேவைப்படுவதுடன், மீன் ரொட்டி, முட்டை ரொட்டி, கட்லட், பஜ்ஜி போன்ற சிற்றுண்டிகளின் உற்பத்திக்கு வெங்காயம் இன்றியமையாதது. இந்த பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமையினால் பேக்கரி உரிமையாளர்களால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...