tamilni 258 scaled
இலங்கைசெய்திகள்

நாடு திரும்பிய மூவருக்கும் பிணை

Share

நாடு திரும்பிய மூவருக்கும் பிணை

கடந்த மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் யாழ். குடத்தனையை வந்தடைந்த மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை நேற்று (16.11.2023) யாழ். பருத்தித்துறை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பிணையில் விடுவிக்கப்பட்ட மூவரும் யுத்த காலத்தில் இந்தியா – தமிழ்நாட்டிற்க்கு புலம் பெயர்ந்து நீண்டகாலம் அங்கு வசித்து வந்த நிலையில் படகு மூலம் நாடு திரும்பி இருந்தனர்.

அவர்கள் தமது சொந்த ஊரான குடத்தனை பகுதியில் தங்கி இருந்த வேளை அவர்களை கைது செய்த பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பருத்தித்துறை நீதிமன்றம் நேற்றைய தினம் தலா ஒரு இலட்சம் ஆட்பிணை மற்றும் வாராந்தம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடப்படவேண்டும் என்கின்ற நிபத்தனையில் பிணை வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...