பாறை சரிவால் தடைப்பட்டிருந்த பதுளை ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது!

image 79b3cf76e5

மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பாறை சரிவால் தடைப்பட்டிருந்த பதுளைக்கான ரயில் சேவை இன்று (நவம்பர் 21) பிற்பகலில் வழமைக்குத் திரும்பியதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதை மீண்டும் திறக்கப்பட்டது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் இரவு நேர அஞ்சல் ரயில் இயந்திரம், இடிந்து விழுந்த பாறை சரிவில் சிக்கி அடைபட்டதால் சேவை தடைப்பட்டது.

மூன்று நாட்களுக்குப் பிறகு, இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் ரயில் பாதை இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான இரவு நேர அஞ்சல் ரயில்கள் உட்பட மற்ற ரயில்கள் அனைத்தும் இன்று வெள்ளிக்கிழமை (21) முதல் வழக்கம் போல் இயங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version