மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம்! பிரதமர் எச்சரிக்கை
சமஷ்டி அதிகாரத்தைக் கோருவதற்கு தமிழர்களுக்கு – தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு, எனினும் அதனை வழங்குவதா இல்லையா என்பதை நாடாளுமன்றமும் அரசாங்கமும் மட்டுமே முடிவு செய்யும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
எனவே இது தொடர்பில் வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக தமிழர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எழுந்தமானமாக நிராகரித்து விட முடியாது.
அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அந்தத் தீர்வை வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் நாடாளுமன்றமும் – அரசாங்கமுமே முடிவு செய்ய முடியும்.
எனவே அதிகாரப் பகிர்வு தொடர்பில் விமர்சனக் கருத்துகளை முன்வைத்து நாட்டில் மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம் என்று சகல தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமஷ்டி அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தரப்புகள் கோரிக்கை முன்வைத்து வருகின்றன.
இந்தநிலையில், “தமிழர்கள் கோரும் சமஷ்டியை ஒருபோதும் அரசாங்கம் வழங்காது. அதனைக் கோருவது பயனற்றது” என்று அரச தரப்பு ஆளும் கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- breaking news sri lanka
- cricket sri lanka
- Dinesh Gunawardena
- english news
- Government of Sri Lanka
- news from sri lanka
- news in sri lanka today
- Parliament of Sri Lanka
- Ranil Wickremesinghe
- sirasa news
- sri lanka
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news tamil
- sri lanka news today
- sri lanka news today tamil
- Sri lanka politics
- sri lanka sports
- sri lanka tamil news live
- sri lanka tamil news today
- sri lanka tamil news today 2023
- sri lanka trending
- sri lankan news
- Srilanka Tamil News
- tamil lanka news
- tamil sri lanka news
- tv news
Leave a comment