மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம்! பிரதமர் எச்சரிக்கை
இலங்கைசெய்திகள்

மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம்! பிரதமர் எச்சரிக்கை

Share

மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம்! பிரதமர் எச்சரிக்கை

சமஷ்டி அதிகாரத்தைக் கோருவதற்கு தமிழர்களுக்கு – தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு, எனினும் அதனை வழங்குவதா இல்லையா என்பதை நாடாளுமன்றமும் அரசாங்கமும் மட்டுமே முடிவு செய்யும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பில் வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக தமிழர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எழுந்தமானமாக நிராகரித்து விட முடியாது.

அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அந்தத் தீர்வை வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் நாடாளுமன்றமும் – அரசாங்கமுமே முடிவு செய்ய முடியும்.

எனவே அதிகாரப் பகிர்வு தொடர்பில் விமர்சனக் கருத்துகளை முன்வைத்து நாட்டில் மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம் என்று சகல தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமஷ்டி அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தரப்புகள் கோரிக்கை முன்வைத்து வருகின்றன.

இந்தநிலையில், “தமிழர்கள் கோரும் சமஷ்டியை ஒருபோதும் அரசாங்கம் வழங்காது. அதனைக் கோருவது பயனற்றது” என்று அரச தரப்பு ஆளும் கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...