17 4
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பேரழகு தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவி பெருமிதம்

Share

இலங்கையின் கலாசாரத்தை பார்த்து நெகிழ்ச்சியடைவதாக அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட மகளீர் கிரிக்கெட் அணியின் தலைவி சமாரா டல்வின் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நடந்த போட்டியின் போது இலங்கை தொடர்பில் அவர் வெளியிட்ட தகவல்கள், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விளையாட்டு என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்கக் கூடிய முக்கிய கருவியாக சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள், நாட்டின் அடையாளமாக உள்ளன. அதன் கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக வேர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு மேடையாகவும் வளர்ந்து வருகின்றன.

இலங்கையின் இயற்கை அழகு, கலாசார பன்மை மற்றும் மக்களின் நட்புறவு மிகவும் சிறப்பாக உள்ளது. இது சர்வதேச ரீதியில் இலங்கையின் மதிப்பை உயர்த்தும் வகையில் உள்ளது.

இலங்கையிற்கு வெளிநாட்டு அணிகள் வருகை தரும் போதெல்லாம், விளையாட்டு நிர்வாகிகள் நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு செழுமையை வெளிநாட்டு அணிகளுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

விமர்சனங்கள் இருந்தாலும், நாட்டின் பெயரை சர்வதேச ரீதியில் உயர்த்தும் ஒரு வகையான முயற்சியாக பார்ப்பதாக சமாரா டல்வின் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...