24 666447578cbed
இலங்கைசெய்திகள்

தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட டென்மார்க் நாட்டின் பிரதமர்

Share

தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட டென்மார்க் நாட்டின் பிரதமர்

டென்மார்க் நாட்டின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ( Mette Frederiksen) தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஃபிரடெரிக்சன், தலைநகர் கோபன்ஹேகன் சதுக்கத்தில் இருந்தபோது நேற்று (07) மாலை 6 மணியளவில் ஒருவரால் பிரதமர் தள்ளப்பட்டதாகவும், இது அவரை தடுமாறச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவரை தள்ளிச் சென்றவர் தப்பி ஓட முயன்றபோது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்ற தாக்குதல் அண்டை நாடான ஸ்லோவேக் பிரதம மந்திரி ரொபர்ட் ஃபிகோ மீதும் அண்மையில நடத்தப்பட்டுள்ளது.

இவர் கடந்த மே 15ஆம் திகதி ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார்.

ஹன்ட்லோவா நகரில் அரசாங்கக் கூட்டத்திற்குப் பிறகு ஆதரவாளர்களை வாழ்த்திக் கொண்டிருந்த ஃபிகோ அருகில் இருந்து நான்கு முறை சுடப்பட்டார்.

இந்நிலையில், அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...