17 6
இலங்கைசெய்திகள்

யாழில் இளைஞர்கள் மீது தாக்குதல் : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

Share

யாழில் இளைஞர்கள் மீது தாக்குதல் : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் அராலி ஆலடி சந்திக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் நின்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு (07.08.2024) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய குழுவுக்கும் அவ்விடத்தில் நின்ற இளைஞர்களுக்கும் ஏற்கனவே உள்ள முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது

தாக்குதல்களுக்கு உள்ளாகியவர்களில் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...