25 684578d12b30a Recovered 7
இலங்கைசெய்திகள்

இதுவரை அட்லீ இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் செய்துள்ள மொத்த வசூல் விவரம்… இதோ

Share

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக கொண்டாடப்படும் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தனது பயணத்தை தொடங்கியவர் அட்லீ.

நண்பன், எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக இருந்துள்ளார். அதன்பின் தனது முதல் முயற்சியாலேயே முன்னணி நடிகர்களான ஆர்யா மற்றும் நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்ற காதல் திரைப்படம் இயக்கினார்.

இதுவரை அட்லீ இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் செய்துள்ள மொத்த வசூல் விவரம்… இதோ | Atlee 5 Movies Bo Details

அப்போது ஆரம்பித்த பயணம் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை வைத்து படங்கள் இயக்கி இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன்-தீபிகா படுகோனேவை வைத்து பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒரு படம் இயக்குகிறார்.

படம் குறித்து வரும் ஒவ்வொரு தகவல்களும் பிரம்மாண்டத்தின் உச்சமாக உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் ரூ. 50 கோடி வசூல் வேட்டை செய்திருந்தது.

தளபதி விஜய்யுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து அவர் இயக்கிய படம் தெறி. கடந்த 2016ம் ஆண்டு வெளியான இப்படம் ரூ. 150 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது.

தெறி பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்தவர் மெர்சல் படத்தை இயக்கினார். விஜய் 3 வேடங்களில் நடிக்க கடந்த 2017ம் ஆண்டு வெளியான இப்படம் ரூ. 240 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது.

தெறி, மெர்சல் படம் கொடுத்த வெற்றி 3வது முறையாக பிகில் படம் மூலம் விஜய்யுடன் இணைந்தார். கடந்த 2019ம் ஆண்டு வெளியான இப்படம் ரூ. 305 கோடி வரை வசூலை குவித்து சாதனை படைத்தது.

4 படங்கள் செம ஹிட்டடிக்க பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானுக்கு அட்லீ மீது பார்வை பட இருவரும் இணைந்து ஜவான் என்ற படத்தை கொடுத்தார்கள். கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படம் உலக அளவில் ரூ. 1117.39 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரும் சாதனை படைத்தது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...