24 668bea21d71b6
இலங்கைசெய்திகள்

கொழும்பில் அழைப்பிதழினால் வந்த உயிராபத்து – சமூக வலைத்தளங்களில் பரவும் படங்கள்

Share

கொழும்பில் அழைப்பிதழினால் வந்த உயிராபத்து – சமூக வலைத்தளங்களில் பரவும் படங்கள்

கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தில் அமைந்துள்ள அழகு கலை நிலையத்தை திறப்பதற்கு கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவிற்கு கிடைத்த அழைப்பிதல் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

சுரேந்திர வசந்த பெரேராவிற்கு அழகு கலை நிலையத்தை திறப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கமைய இன்று காலை அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தில் அமைந்துள்ள அழகு கலை நிலையத்தை திறப்பதற்காக சுரேந்திர வசந்த பெரேரா தனது மனைவியுடன் சென்றுள்ளார்.

இதன்போது ​​துப்பாக்கியை ஏந்திய இருவர் அழகு கலை நிலையத்திற்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த சுரேந்திர வசந்த பெரேரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அழைப்பிதழ்களை பெற்ற ஏனையவர்கள் காயமடைந்துள்ளனர்.

மனைவியும் சுடப்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பாடகி கே சுஜீவாவும் கலந்து கொண்டதுடன் அவரும் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

காயமடைந்த மேலும் இரு பெண்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...

வேதனம்
இலங்கை

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பில் வெளியான தகவல்.

பிரதியமைச்சர் நளின் ஹேவகே, அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...