அஸ்வெசும கொடுப்பனவு! மக்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள தொகை!

9 38

அஸ்வெசும கொடுப்பனவு! மக்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள தொகை!

அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவின் முதலாம் கட்டத்தின் கீழ் 212,000 423 குடும்பங்களுக்கு இதுவரை செலுத்தப்படாத நிலுவைத் தொகையை வைப்பிலிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் நிலுவைத் தொகையை வைப்பிலிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 1314 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை நிலுவைத் தொகையாக வைப்பிலிட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version