12 12
இலங்கைசெய்திகள்

போலி கல்வித்தகமை கொண்டவர்கள் பதவி விலக வேண்டும்: வலியுறுத்தும் நாமல்

Share

போலி கல்வித்தகமை கொண்டவர்கள் பதவி விலக வேண்டும்: வலியுறுத்தும் நாமல்

சபாநாயகர் அசோக ரன்வல (Asoka Ranwala) நாடாளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் கல்வித் தகைமை தொடர்பில் எழுந்த சர்ச்சைகளினால் அவர் சபாநாயகர் தனது பதவியை பதவி விலகல் செய்தமை பாராட்டத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவொன்றை முன்வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் சமூகமயப்படுத்தப்பட்ட கல்வித் தகுதியை நிரூபிக்கத் தவறினால் உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து சபாநாயகர் அசோக்க ரன்வல நேற்றையதினம் (13.12.2024) தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.

இதேவேளை, சபாநாயகர் அசோக ரன்வெல(ashoka rangwalla) தனது பட்ட தகுதியை நிரூபிக்க முடியாமல் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் ஆளும் அநுர அரசின் மற்றுமொரு எம்பியின் பட்ட தகுதி தொடர்பிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியில்(npp) இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவின்(Kosala Nuwan Jayawira) கல்வித் தகைமை தொடர்பிலேயே சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

பொதுத் தேர்தல் பிரசாரக் காலத்தில் தன்னைப் பொறியியலாளர் என்று அவர் விளம்பரப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...