4 47
இலங்கைசெய்திகள்

பத்து வருடங்களுக்கு பின்னர் சென்னை அணிக்கு திரும்பிய தமிழக வீரர்

Share

பத்து வருடங்களுக்கு பின்னர் சென்னை அணிக்கு திரும்பிய தமிழக வீரர்

சென்னை அணி(chennai super kings) ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அஸ்வின்(ashwin) தாய்வீடு திரும்பியுள்ளார். அவரை சி எஸ் கே அணி 9.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

நேற்று(24) சவுதி அரேபியாவின்(saudi arabia) ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலத்தின் போதே அஸ்வின் சென்னை அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அஸ்வின் “வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்வார்கள். நான் சென்னை அணிக்காக 2008 முதல் 2015 வரை விளையாடியதுதான் எனது சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவியது.

2011 ஆம் ஆண்டு ஏலத்தில் என்னை எடுக்க சிஎஸ்கே நிர்வாகம் போட்டி போட்டது போல, இப்போதும் செயல்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

10 வருடங்களுக்குப் பிறகு சென்னை அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. தோனி மற்றும் ருத்துராஜ் ஆகியோருடன் விளையாடக் காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதேவேளை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட்(Rishabh Pant.). அதே போல ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரராக இருந்த டேவிட் வோர்னர்(david warner) எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...