‘மே 9’ வன்முறைச் சம்பவங்கள்: நேற்று மட்டும் 159 பேர் கைது!

காலிமுகத்திடல்

இம்மாதம் 9ஆம் திகதியன்று காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 159 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இதுவரை 398 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version