11 16
இலங்கைசெய்திகள்

ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு

Share

ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்டுள்ள வழக்கொன்றில் குற்றவாளியாக பெயர் குறிப்பிடபட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரரை (Galagoda Aththe Gnanasara) கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது இன்று (19.12.2024) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் (Colombo Magistrate’s Court) வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் இன்று அவர் முன்னிலையாக வேண்டிய நிலையில் வழக்கிற்கு வருகை தரவில்லை என்பதால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

கலகோட அத்தே ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக இன்றைய வழக்கு விசாரணையில் முன்னிலையாகவில்லை என அவர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.

எவ்வறாயினும் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...