154 கிலோ கேரளா கஞ்சாவை கைப்பற்றிய இராணுவம் !!

1638870393 kanja 2

வவுனியா ஓமந்தை இராணுவ சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 154 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே  இவ்வாறு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து மீன்கள் ஏற்றும் குளிரூட்டி வாகனத்தில் கொழும்புக்குக்கு குறித்த கஞ்சா கடத்தப்பட்டுள்ளது.

இவ்வாகனத்தில் இருந்து 154 கிலோ கேரளா கஞ்சாவினை இராணுவத்தினர் கைப்பற்றியதுடன் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளரையும் கைது செய்து ஒமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Exit mobile version