shavendrasilva 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையை மீட்க இராணுவம் தயார்! – சவேந்திர சில்வா அதிரடி அறிவிப்பு

Share

“இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்க இராணுவத்தினரான எம்மால் முடிந்த சகல ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொடுத்து வருகின்றோம். எமக்கான சரியான வாய்ப்பு வழங்கப்பட்டால் நாம் செய்து காட்டுவோம்” என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“அதிகளவான பகுதிகளில் இராணுவம் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றது. அதேபோல் இராணுவத்துக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய தேசிய உற்பத்தி செயற்பாடுகளிலும் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் நிலைமைகளின்போதும் இராணுவம் பாரிய சேவையை செய்தது. தற்போதும் பல்வேறு நெருக்கடி நிலைமைகளிலிருந்து மக்களை மீட்கவும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எம்மாலான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க முடியும். அதற்கு எமக்கான சரியான வாய்ப்பு வழங்கப்பட்டால் செய்து காட்டுவோம். எம்மால் முடியாது என்று ஒன்றுமே இல்லை.

எந்தச் சவால்களையும் சந்திக்க நாம் தயாராகவுள்ளோம். எனினும், மக்கள் ஐக்கியமும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...