இராணுவ வீரர்களின் கடவுச்சீட்டுக்களை உடன் மீளப்பெற நடவடிக்கை

5 32

இராணுவ வீரர்களின் கடவுச்சீட்டுக்களை உடன் மீளப்பெற நடவடிக்கை

மேஜர் பதவிக்குக் கீழே உள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களையும் தங்கள் கடவுச்சீட்டுக்களை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிர்வாக நோக்கங்களுக்காகவும் வெளிநாட்டு பயிற்சி மற்றும் அலுவலக விடயங்களுக்கு கடவுச்சீட்டுக்களை பெறுவதில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார்.

பல இராணுவ வீரர்கள் வீட்டை விட்டு வெளியே இருப்பதால், அலுவலக நோக்கங்களுக்காக கடவுச்சீட்டுக்களை பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என்பதற்காக அவர் கூறியுள்ளார்.

எனவே, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எந்த நேரத்திலும் படைப்பிரிவுகளிலிருந்து கடவுச்சீட்டுக்களை மீளப்பெறலாம் என்று வருண கமகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்நடவடிக்கை நிர்வாக காரணங்களுக்காக மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எந்த நேரத்திலும் படைப்பிரிவுகளிலிருந்து பாஸ்போர்ட்டுகளை மீட்டெடுக்கலாம் என்று வருண கமகே தெளிவுபடுத்தியுள்ளார்.

Exit mobile version