11 25
இலங்கைசெய்திகள்

எஸ்.எஸ்.சி. மைதான பாதுகாவலர்களை தாக்கிய இராணுவ பிரிகேடியர்!

Share

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தின் பாதுகாவலர்களை தாக்கிய இராணுவ பிரிகேடியர் ஒருவருக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இரண்டு பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு முந்திய பயிற்சிப் போட்டி நடைபெற்றுள்ளது.

அதற்கு முந்திய நாள் இரவு குறித்த பாடசாலையொன்றின் பழைய மாணவரான இராணுவ பிரிகேடியர் ஒருவர் எஸ்.எஸ்.சி மைதானத்திற்கு பொருட்கள் சிலவற்றை எடுத்து வந்து அவற்றை மேல் மாடிக்கு எடுத்துச் செல்ல லிப்டை இயக்குமாறு அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு உத்தரவிட்டுள்ளார்.

எனினும், லிப்டின் சாவி தன்னிடம் இல்லை என்று குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் பதிலளித்த போது அவரை கடுமையாக தாக்கிய பிரிகேடியர், அந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை பாதுகாக்க முயன்ற சக உத்தியோகத்தர் ஒருவரையும் தாக்கியுள்ளார்.

இந்நிலையில், தற்போது இரண்டு பாதுகாப்பு ஊழியர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...