images 4 2
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

குடும்பத் தகராறு முற்றியதில் பயங்கரம்: வீட்டுக்குத் தீ வைத்த தந்தை – மகளுடன் அவரும் பலி!

Share

கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரகம் கொலனி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் தனது வீட்டிற்குப் பெற்றோல் ஊற்றித் தீ வைத்ததில், அவரும் அவரது 13 வயது மகளும் உயிரிழந்த சோக சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்தத் தீ வைப்புச் சம்பவத்தில் தீயை வைத்த 43 வயதுடைய தந்தை மற்றும் அவரது 13 வயதுடைய மகள் ஆகியோர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தீக்காயங்களுக்கு உள்ளான 36 வயதுடைய மனைவி, 15 வயதுடைய மகள், 66 வயதுடைய பாட்டி மற்றும் அவர்களைக் காப்பாற்றச் சென்ற 20 வயதுடைய மகன் ஆகியோர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியைத் தாக்கி வந்துள்ளார். இது தொடர்பாகக் கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தந்தை தீ வைக்கும் போது வீட்டில் இல்லாத 20 வயதுடைய மகன், சம்பவம் அறிந்து விரைந்து வந்து தனது தாய் மற்றும் சகோதரிகளைக் காப்பாற்ற முயன்ற போதே தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தொடர்ச்சியான குடும்பத் தகராறு மற்றும் மதுப் பழக்கமே இந்தத் துயரச் சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

 

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...