Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனா போலி தகவல்களை வெளியிடுவதாக ஆங்கில ஊடகம் காட்டம்

Share

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா போலி தகவல்களை நாடாளுமன்றில் வெளியிடுவதாக பிரபல ஆங்கில ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடந்த அமர்வில், அர்சுனா தவறான தகவலை வெளிப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவர் தனது உரையில், யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளைக் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்பாக, ஒரு தாயும், மூன்று மாதக் குழந்தையும் சேர்ந்து புதைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குழந்தையை தாய் தனது கைகளில் பற்றிக் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

எனினும், இத்தகவல் முற்றிலும் பொய்யானது என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது செம்மணியில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு நடவடிக்ககைகளின் இரண்டாவது கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதில், ஒரு தாய் தனது குழந்தையை கட்டிக் கொண்டு இருந்தது போன்ற எலும்புக்கூடுகள் எதுவும் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு பதிலாக, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட உருவப்படத்தின் அடிப்படையிலேயே அர்சுனா ராமநாதன் இந்த உரையை நிகழ்த்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனாவின் இந்தக் கருத்துக்கு தமிழ் சமூகம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக குறித்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Share
தொடர்புடையது
world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...

world 107
செய்திகள்உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: கவலையின்றி UFC சண்டையைக் கண்டுகளித்த டொனால்ட் டிரம்ப்!

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

world 106
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையிலிருந்து வெலிசராவுக்கு மாற்றப்பட்ட 7 முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஏழு முக்கிய தலைவர்கள், பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து...

world 101
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: போர் நிறுத்தத்தைத் தொடர ஆஸ்திரேலியா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத்...